உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏன்?ஏன்?ஏன்?

0

Posted on : Sunday, March 27, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் காலையில் ஒரு தாய் தன மகனை படுக்கையிலிருந்து எழுப்பச் சென்றார்.''எழுந்திரு,பள்ளிக்குச் செல்ல நேரமாகி விட்டது.''மகன் சிணுங்கிக் கொண்டே சொன்னான்,''நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன்.''தாய் சொன்னாள்,''நீ பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று சொல்வதற்கு ஏதேனும் இரு காரணங்களை சொல்லு பார்ப்போம்,''மகன் சொன்னான்,''பசங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.ஆசிரியர்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.''தாய்,''ஓ,அதுதான் காரணமா?சரி,சரி,எழுந்திரு.பள்ளி செல்ல தயாராகு.''என்றாள்.மகன்,''நான் ஏன் பள்ளி செல்ல வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்,''என்று கேட்க,தாயும் சிரித்துக் கொண்டே சொன்னாள்,''ஒன்று உனக்கு ஐம்பது  வயதாகி விட்டது.இரண்டாவது நீ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment