உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மூட்டு வலி

0

Posted on : Sunday, March 27, 2011 | By : ஜெயராஜன் | In :

மூட்டு வலிக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரின் அறை முன்  நிறையப் பேர் காத்திருந்தனர்.அப்போது ஒரு வயதான பெண் ஒரு ஊன்று கோலுடன் பாதி  உடல் கூனிய நிலையில் வந்து அமர்ந்தாள்.அவளுடைய முறை வந்தபோது  டாக்டரின் அறைக்குள் சென்றுபின் ஐந்தே நிமிடங்களில் கூனின்றி தலை நிமிர்ந்து நேராக  கைத்தடியுடன் நடந்து வந்தாள்.அதைப் பார்த்து அதிசயப்பட்ட ஒரு பெண்மணி அவளிடம் வேகமாகச் சென்று ,''இது பெரிய அதிசயமாக இருக்கிறதே!டாக்டரின் அறைக்குள் செல்லும்போது கூனிச் சென்ற நீங்கள் எப்படி வெளிய வரும்போது இப்படி நிமிர்ந்து வர முடிந்தது?அப்படி என்னதான் வைத்தியம் செய்தார்?''என்று கேட்டாள்.அந்த பெண் சிரித்துக்கொண்டே சொன்னாள்,''டாக்டர் நான் வைத்திருந்த சிறிய கைத்தடியை வாங்கி வைத்துக்கொண்டு இந்த பெரிய கைத்தடியைக் கொடுத்தார்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment