உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எங்கேயிருந்து?

0

Posted on : Saturday, March 26, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா,ஒரு கப்பல் கம்பெனியில்  நடந்தநேர்முகத்தேர்வுக்கு சென்றார்..கம்பெனியின் மேனேஜர்,''முல்லா,இது ஆபத்தான வேலை.கடலில் கொந்தளிப்புகள் ஏற்பட்டு பெரும் அலைகள் வரும்.அதிலிருந்து உன் கப்பலைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுப்பாய்?''என்று கேட்டார்.முல்லா,''இது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.கப்பலில் உள்ள கனமான பொருளை எடுத்து  லேங்கரில் தொங்க விடுவேன்,''என்றார்.மேனேஜர்,''அடுத்து இன்னொரு பெரிய அலை வந்தால் என்ன செய்வாய்?''என்று கேட்க முல்லாவும்,''இன்னும் கொஞ்சம் கனமான பொருட்களை இன்னொரு லேங்கரில் தொங்க விடுவேன்,''என்றார்.மேனேஜரும் திருப்பத் திரும்ப அடுத்து அலை வந்தால்  என்ன செய்வாய் என்று கேட்க முல்லாவும் சளைக்காமல் அதே பதிலை சொன்னார்.கடுப்படைந்த மேனேஜர்,''இவ்வளவு லேங்கர்களுக்கு எங்கே போவாய்?''என்று கேட்டார்.முல்லாவும்,''நீங்கள் இவ்வளவு அலைகளுக்கு எங்கே போவீர்களோ,அங்கே,''என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment