உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அடைக்கும் தாழ்

0

Posted on : Friday, March 18, 2011 | By : ஜெயராஜன் | In :

தனக்கு விருப்பம் இல்லாத ஒன்றைச் செய்யக் கட்டாயப்படுத்தப்படும் மனிதர் அடுத்து எப்படிப்பட்டவர் ஆவார்?மூன்று சாத்தியங்கள் உள்ளன.
*தன மீதுள்ள தளையை அறுத்து புரட்சிக்காரராகலாம் .
**இது தளையே அல்ல,சுகமான சுமைதான் என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை ஆகலாம்.
***தன மீது கவிழ்ந்திருக்கும் இரண்டு வகை வாழ்வின் இன்ப துன்பங்களும் கூடாது:இரண்டின் இன்பங்கள் மட்டும் வேண்டும் என்று அதற்காக சூழ்ச்சிகள் செய்து சுயநலத்தின் உச்சியில் குற்றவாளி ஆகலாம்.
நமது சமூகத்தில் முதல் வகையினர் குறைவு.இரண்டாம் வகை வாழ்வைத்தான் பெரும்பாலோனோர் வாழ்கிறோம்.மூன்றாம் வகையினரும் குறைவு.ஆனால் இந்த நடுநிலைப் பிரிவினரிடமிருந்து தான் புரட்சியாளரும் வருவார்:குற்றவாளியும் உதிப்பார்.நாம் ஏற்றுக்கொண்ட அடிமைத்தனத்திலிருந்து நமக்கே சகிக்க முடியாத அலுப்பு ஏற்படும்போது,எந்தப் பக்கம் குதிக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி.
மாட்டிக் கொள்ளாதவரை குற்றவாளியாக இருப்பதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றொரு கோட்பாடு நாளுக்கு நாள் இங்கு வலுவடைந்து வருகிறது.மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற பயமே பலரைக் குற்றவாளிகள் ஆக்காமல் தடுக்கிறது.இந்த மனப்பான்மைகளை நமது  கல்வியும்,குடும்பமும்,அரசியலும் தான் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றன.
எது குற்றம் என்ற சமூக வரைக்கும்,சட்ட வரைக்கும்,தனி மனிதர் கருத்துக்கும் தொடர்பு இல்லாதபோது குழப்பங்கள் அதிகரித்து குற்றங்களும் அதிகரிக்கின்றன.
குழந்தைகளின் கல்வி முதல் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் வரை எல்லாமே அவர்கள் மீது நம் விருப்பங்களைத் திணிக்கும் விஷயங்களாக இங்கே மாற்றப்பட்டு விட்டன.எல்லாம் அன்பின் பெயரால்தான்.இந்த   நிர்ப்பந்தங்கள் ஒவ்வொன்றும் எதிர்காலக் குற்றத்தின் விதியா,புரட்சியின் விதியா என்று அறிய முடியாமல் காத்துக் கொண்டிருக்கின்றன.விதிகள் அழுகி விளைச்சலே  இல்லாத அடிமைத்தனம் மாறிவிடும் வரையில் சமூக நிம்மதி காப்பாற்றப்படுகிறது .ஒவ்வொரு புதுக் குற்றத்திற்கும் பின்னர்தான் அது தொடர்பான நீதிக் கொள்கையை சமூகம் வகுத்துக் கொள்ள முடிகிறது. சமூகத்தில் நடக்கும் எந்த குற்றமும் நியாயப் படுத்தப் பட வேண்டியதில்லை.ஆனால் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதனதன் நியாயம்  என்று ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கிறது.அன்பே அடைக்கும் தாழ் ஆக முடியும்.
                                                                             ----எழுத்தாளர் ஞாநி

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment