உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாய்ப்பு

0

Posted on : Thursday, March 17, 2011 | By : ஜெயராஜன் | In :

நோயாளி: நான் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா,டாக்டர்?
டாக்டர்: நூறு சதவீதம் உறுதியாக நீங்கள் பிழைத்து விடுவீர்கள்.
நோயாளி:ரொம்ப  மகிழ்ச்சி.ஆனால் எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்,டாக்டர்?
டாக்டர்: இந்த நோய் வந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் இறந்து விடுவார்கள்.  இதே வியாதிக்காக என்னிடம் வந்த ஒன்பது பேர் இறந்து விட்டார்கள்.நீங்கள் பத்தாவது ஆள்.
**********
தன நோய்க்கு மருத்துவம் பார்க்க சிறந்த டாக்டர் ஒருவரை சொல்லுமாறு ஒருவன் தன நண்பனிடம் கேட்டான்.அவனுமொரு டாக்டர் பேரை சொல்லி,''ஆனால் அவர் முதல் முறை எண்ணூறு ரூபாயும் அடுத்த தடவைகளில் ஐநூறு ரூபாயும் வாங்குவார்,''என்றான்.இவன் அந்த டாக்டரிடம் போய்,''நான் சென்ற முறை உங்களிடம் வந்து  சிகிச்சை பெற்றது ஞாபகம் இருக்கிறதா,டாக்டர்?''என்று கேட்டான்.டாக்டர் ஒன்றும் கூறாது  அவனை சோதனை செய்து விட்டு,''சென்ற முறை நான் கொடுத்த மாத்திரை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள்,''என்றார்.
**********
இரவில் தனக்கு உறக்கமே வருவதில்லை என்று ஒருவன் டாக்டரிடம் கூறினான்.டாக்டர் அவனை நன்கு பரிசோதித்துவிட்டு,''உனக்கு ஒரு குறையுமில்லை.உன் கவலைகளுடன்  படுக்கைக்கு செல்லாதே,தூக்கம் தானே வரும்.''என்றார்.''நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது,டாக்டர்.ஆனால் என் மனைவி தனியாகத் தூங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே?''என்றான்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment