உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்பே சிறந்தது.

0

Posted on : Thursday, August 05, 2010 | By : ஜெயராஜன் | In :

கஞ்சன் ஒருவன் படுக்கையிலிருந்து எழுந்ததும் தன மனைவி இறந்து கிடப்பதைப் பார்த்தான்,உடனே என்ன செய்வது என்று யோசித்தான்.உடனே சமையல்காரியைக் கூப்பிட்டான்.அவளிடம்,''இன்று காலை சிற்றுண்டிக்கு ஒரு முட்டைபோதும்,''என்று சொன்னான்.
**********
டாக்டர்  நோயாளியிடம் சொன்னார்,''இன்று முதல் நீங்கள் உப்பு,உறைப்பு,காரம் எதுவுமில்லாத உணவை தான் உன்ன வேண்டும்.'' என்றார்.நோயாளி ,''கல்யாணம் ஆனதிலிருந்து  அப்படித்தானே  டாக்டர் சாப்பிட்டு வருகிறேன்.''என்றார் பரிதாபமாக.
**********
ஒருவர் தன நண்பன் வீட்டுக்கு சென்றார்.அங்கு நண்பர் தன் நாயுடன் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.''அட,இவ்வளவு புத்திசாலியான நாயை நான் பார்த்ததில்லை,''என்று நண்பனிடம் சொன்னார்.நண்பர் திகைத்துப்போய் , ;நீ நினைப்பது போல அவ்வளவு புத்திசாலியான நாய் இல்லை.பத்து முறை விளையாடியதில் மூன்று முறை என்னிடம் தோற்றுவிட்டது,'என்றாரே பார்க்கலாம்.
**********
ஒருவர்தன பழைய புத்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது ஒரு பழைய ரசீது ஒன்றைப் பார்த்தார்.அது ஒரு தையற்கடையில்ஏழு  ஆண்டுகளுக்கு முன் தைக்கப்போட்ட ஒரு சட்டைக்கான ரசீது.எப்படியோ சட்டையை வாங்க மறந்து விட்டிருக்கிறார்.நம்பிக்கை இல்லாவிடினும் எதற்கும் ஒரு வாய்ப்பு பார்த்துவிடலாம் என்று கருதி தையற்கடைக்கு சென்று ஒன்றும் சொல்லாமல் ரசீதை மட்டும் நீட்டினார்.கடைக்காரரும்  அதை வாங்கிக்கொண்டு சட்டையைத் தேட கடைக்குள் சென்றார். இவருக்கோ பயங்கர  டென்சன்.கொஞ்ச நேரம் கழித்து கடைக்காரர் அசடு வழிய சிரித்துக்கொண்டே வந்து சொன்னார்,''சார்,சட்டை ரெடியாக இருக்கிறது.ஆனால் காஜா மட்டும் இன்னும் போடவில்லை.நாளைக்கு வந்து சட்டையை வாங்கிக் கொள்கிறீர்களா?''.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment