ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான்.திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான்.அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை.இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது.கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால் எனக்கு நன்மை செய்வார்.நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார்.சாத்தானைத் தொழுததில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை எதுவும் இருக்காது.இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை.நான் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.''
|
|
Post a Comment