உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அனுபவங்கள்

0

Posted on : Monday, August 09, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பயணி,டாக்சியில் சென்று கொண்டிருக்கும்போது,அதன் ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக,அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.உடனே ஓட்டுனர் நிலை குலைந்து,இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து,ஒரு மரத்தின்  மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?''பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே,  ''உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்  என்று நான்  நினைத்துக்கூட பார்க்கவில்லை.''ஓட்டுனர் சொன்னார்,''இல்லை,இது என்னுடைய தவறுதான்.இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன்.  கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்.''
நமது அனுபவங்கள் கடந்த காலத்தால்  பாதிக்கப் படுகின்றன.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment