உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தொந்தரவா?

0

Posted on : Friday, August 06, 2010 | By : ஜெயராஜன் | In :

ஞானி ஒருவரிடம் விளக்கங்கள் கேட்ட ஒருவன் அடிக்கடி வந்து சந்தேகங்கள் கேட்ட போதெல்லாம் ஞானி விரிவாக விளக்கினார்.அவன் ஞானியிடம்,'ஐயா, நான் உங்களுக்கு ஒரு தொந்தரவாகத் தெரியவில்லையா?'என்று கேட்டான். ஞானி அவனிடம் அங்கிருந்த எரியும் விளக்கொன்றை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றுமாறு கூறினார்.அதன்படி சில விளக்குகளை ஏற்றினார் வந்தவர்.ஞானி கேட்டார்,''முதல் விளக்கிலிருந்து நெருப்பை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றியதால் இந்த விளக்குக்கு நஷ்டம் ஏதாவது உண்டா?'''இல்லை,'என்றார் வந்தவர்.;;அதேபோல நீங்களோ மற்றவர்களோ எத்தனை முறை நாடி வந்தாலும் அதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.அதனால் தயங்காமல் எத்தனை தடவை வேண்டுமானாலும் வாருங்கள்.''என்றார் ஞானி அன்புடன்.
                                                                     --சூபி கதை

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment