உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாழ்ந்தேனா?

0

Posted on : Monday, August 09, 2010 | By : ஜெயராஜன் | In :

முதலில்,உயர்நிலைப் பள்ளியில்  முதல் மாணவனாக தேற வேண்டும் என்றுஉயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,சிறந்த கல்லூரியில் சேர வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு,நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,நல்ல ஒரு பெண்மணியைத் திருமணம் செய்ய  உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு குழந்தைகள்பெறுவதற்காக உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,என் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு,நான் ஓய்வு பெற வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,திடீரென எனக்குள் இருந்த உள்ளுணர்வு பளிச்சிட்டது.
நான் வாழ்க்கையை வாழ்ந்தேனா?நான் வாழ்வதையேமறந்து விட்டேனே!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment