உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சபாஷ்

0

Posted on : Tuesday, August 10, 2010 | By : ஜெயராஜன் | In :

இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் படையெடுத்து வந்தார்  பாரசீக மன்னர் ஷா அப்பாஸ்.அப்போது ஜகாங்கீர் ஆட்சி காலம்.காந்தகார் வரை வந்துவிட்ட எதிரிப்படைகளை ஜகாங்கீர் படைகள் முறியடித்துவிட்டன.அதை அறிந்ததும் ஜகாங்கிருக்கு ஒரு ஓலைஅனுப்பினார் ஷா.தன படைகள் ஜகாங்கீர் நாட்டின் மீது படையெடுத்தது,தனக்குத் தெரியாமலே நடந்துவிட்டது என்றும் ஜகாங்கிருடன் தன நட்புறவு கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.அது கேட்ட ஜகாங்கீர்,''இது ஷா அப்பாஸ் வேலை,''என்று தன மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.ஆகவே மெச்சத்தக்க காரியத்தை செய்தவர் ஷா அப்பாஸ்.இந்த மாதிரி காரியங்களை யார் செய்தாலும் ,'ஷா அப்பாஸ்,'என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.ஷா அப்பாஸ் என்ற வார்த்தை ஷபாஸ் என்று உருதுவில் மாறி பிறகு சபாஷ் என்று தமிழில் மருவிவிட்டது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment