உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மருந்து

0

Posted on : Thursday, August 12, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா கால் நடை மருத்துவரிடம் போனார்.''என்  குதிரை  ரொம்பவும்  சோம்பேறி ஆகிவிட்டது.ஓடவும் மாட்டேங்குது ,நடக்கவும் மாட்டேங்குது.ஒரு சக்திவாய்ந்த மருந்தைக் கொடுத்து அதை ஓடச் செய்யுங்கள்.''என்று மருத்துவரிடம் சொன்னார்.மருத்துவர் சொன்னார்,''இதற்கு ஒரு கசப்பான மருந்து இருக்கிறது.ஆனால் நேரடியாகக் கொடுத்தால் குதிரை குடிக்காது.எனவே இந்த மூங்கில் குழாயை எடுத்துக்கொள்.இந்த மருந்தை குழாயில் நிரப்பு.குழாயின் ஒரு முனையை குதிரையின் வாய்க்குள் வை. மறுமுனையை உன் வாயில் வைத்துக்கொள்.பின் மருந்து குதிரையின் தொண்டைக்குள் இறங்கும்படியாக ஊதிவிடு.''
முல்லாவும் வைத்தியர் சொன்னதுபோல செய்துகொண்டே வந்தார்.ஆனால் பாவம் முல்லா.அவர் ஊதுமுன் குதிரை ஊதிவிட்டது.மருந்து முல்லாவின் தொண்டைக்குள் இறங்கிற்று உடனே மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது.என்பது வயதான முல்லா,தன தோட்டத்தின் வேலியைத் தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தார்.யாரும் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடினார்.அதைப்பார்த்த அவர் மனைவி கவலையுடன் அவர் பின்னே ஓடினார்.ஆனால்  பிடிக்க முடியாதலால்,சற்று நேரம் யோசித்துவிட்டு மருத்துவரிடம் விரைந்தார்.''உடனடியாக அவருக்குக் கொடுத்ததைப்போல இரண்டு மடங்கு மருந்து கொடுங்கள்.அப்போது தான் நான் அவரைப் பிடிக்க முடியும்.''என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment