உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சரியான வாரிசு

0

Posted on : Sunday, February 05, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர்,ஓய்வு பெற ஓராண்டு இருக்கையில் தனக்குப்பின் நிறுவனத்தை நடத்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.அவர் தன மகனையோ.அடுத்து இருந்த மூத்த அதிகாரிகளையோ தலைவராக விரும்பவில்லை.எனவே அவர் துவக்க  நிலையில் இருந்த இளம் அதிகாரிகள் பத்துப் பேரை அழைத்து சொன்னார்,''அடுத்த ஆண்டு உங்களில் ஒருவர்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்.''இளைஞர்களுக்கு ஒரே திகைப்பு.தொடர்ந்து அவர் சொன்னார்,''நான் இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுப்பேன்.அதை நீங்கள் எடுத்துச்சென்று நன்றாக வளர்த்து ஒரு ஆண்டு கழித்து இங்கு கொண்டு வர வேண்டும்.அதைப் பார்த்து நான் ஒருவரை தேர்வு செய்வேன்.''
அனைவரும் மகிழ்வுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதைகளுடன் தங்கள் வீட்டுக்கு சென்றனர்.அவர்களில் முருகன்  என்பவன் வீட்டிற்கு சென்றவன்  தன் மனைவியிடம் விபரத்தை சொல்ல அவளும் அவன் உதவிக்கு வந்தாள்.ஒரு தொட்டியை எடுத்து மண்ணிட்டு உரமிட்டு அதில் விதைத்தார்கள்.தொடர்ந்து தண்ணீரும் ஊற்றி வந்தனர்.ஆனால் என்ன காரணத்தாலோ விதை முளைக்கவில்லை.ஒரு ஆண்டு முழுவதும் பல முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை.
குறிப்பிட்ட நாள் வந்தது.அவனுக்கு மிகுந்த வருத்தம்.ஆனால் அவன் மனைவி,''நீங்கள் இன்று வெறும் தொட்டியையே எடுத்துச்சென்று வளரவில்லை என்ற உண்மையை சொல்லி விடுங்கள்.என்ன ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வோம்,''என்று சொல்ல அவனும் அவ்வாறே செய்தான்.அலுவலகம் சென்றபோது அவன் நண்பர்கள் அனைவரும் அழகழகான செடிகளைக் கொண்டு வந்திருந்தனர்.இவனுடையவெறும்
தொட்டியைப் பார்த்து அனைவரும் கேலி செய்தனர்.
தலைவர் வந்தார்.எல்லாத் தொட்டிகளையும் பார்த்தார்.முருகனுக்கோ ஒரே பயம் இருக்கும் வேலையும் போய்விடுமோ?சிறிது நேரம் கழித்து தலைவர்,''உங்களது அடுத்த தலைவர் முருகன்தான்,''என்று அறிவித்தார்.ஒரே சலசலப்பு.அவரே மீண்டும் பேசினார்,''இத்தேர்வு நம்பிக்கைத் தேர்வு.நான் எல்லோருக்கும் கொடுத்த விதைகள் அவிக்கப்பட்டவை.எனவே அவை முளைப்பதற்கு வாய்ப்பே இல்லை.எல்லோரும் வேறு விதைகளை வளர்த்து இங்கே கொண்டு வந்துள்ளபோது முருகன் மட்டும் உண்மையை இங்கு கூறினான்.எனவே நம்பிக்கைக்குரிய அவனே  இந்த நிறுவனத்துக்கு ஏற்ற தலைவர்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment