விமரிசனங்கள் உங்களைப் பாதிக்கிறதா?இக்கேள்வி கேட்கப்பட்டால் 90%பேர் ஆம் என்பார்கள்.10%பேர் அது என் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பார்கள்.எப்படி?
உங்களை நோக்கி ஒரு விமரிசனம் எழும்போது இறுதியில் அதற்கு மதிப்புத் தர வேண்டுமா என்று யோசியுங்கள்.பிறகு இதற்குமுன் இப்படி ஒரு விமரிசனம் நம்மை நோக்கி வந்திருக்கிறதா என்று பாருங்கள்.பலமுறை உங்களை நோக்கி வந்த விமரிசனம் அது என்றால் நீங்கள் அதற்கு உறுதியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும்.
உங்களை நோக்கி ஒரு விமரிசனம் எழும்போது அதை என்னவென்று ஆராயாமல் நீங்களும் உடனே உங்கள் பங்கிற்கு எதிராளியை விமரிசிக்க ஆரம்பிக்காதீர்கள்.அது மனக்கசப்பை வளர்க்கும்.
அமைதியாக இருந்து கவனியுங்கள்.என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பது சிறந்தது.
உங்கள் மீதுள்ள பொறாமையால் எழும் வீண் விமரிசனமானால் அதைத் தூக்கி எறிந்து விடுங்கள்.
|
|
|



Post a Comment