உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குற்ற உணர்வு

0

Posted on : Thursday, February 23, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தவறு செய்தபின் அதற்காக நமக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.அப்போது இல்லாத ஒரு புத்திசாலித்தனம் இப்போது வளர்ந்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டுமே தவிர நடந்த நிகழ்ச்சிகளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
குற்ற உணர்வு என்பது வளர்ந்து விட்ட புத்திசாலித்தனத்தை வைத்து கடந்து போன வாழ்க்கையை நினைத்து நொந்து கொண்டிருப்பது.குற்ற உணர்வினால் மட்டும் ஒருவன் நல்லவனாகிவிட முடியாது.இன்னும் சொல்லப் போனால் குற்ற உணர்வு ஆழமாக ஆழமாக அந்தச் செயலை உங்களால் நிறுத்தவே முடியாது.எந்த ஒரு செயலையும் செய்யும்போது யோசிக்காமல் செய்த பின் யோசிப்பது போஸ்ட் மாஸ்டர் செய்வது மாதிரி.இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு அதிக பட்சம் என்ன செய்ய முடியும்?அழலாம்.எப்படி இறந்தார் என்று கண்டு பிடிக்கலாம்.வேறு ஒன்றும் செய்ய இயலாது.குற்ற உணர்வும் அது போன்றதே.குற்ற உணர்விலிருந்து  தன்னை  விடுத்துக்  கொள்வது  தியானம்.மற்றவர்களைக் குற்ற உணர்வில் ஆழ்த்தாது இருப்பது  சேவை.   .

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment