உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

படித்தால் தெரியும்.

0

Posted on : Thursday, February 02, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு சீடன் குருவைப் பார்த்து,''என்னால் முழுக் கீதையையும் படிக்க முடியாது.ஆகவே எது முக்கியமோ,அதை மட்டும் சொல்லுங்கள்,''என்றான்
''சரி பதினேழு அத்தியாயத்தைத் தள்ளிவிட்டு பதினெட்டாம் அத்தியாயத்தை மட்டும் படி.''
''அதில் 78 சுலோகங்கள் இருக்கின்றன.என்னால் அவ்வளவு படிக்க முடியாது.''
''சரி,அதில் 68 வது சுலோகத்தை மட்டுமாவது படி.''
''ஆ,அதில் 12 வார்த்தைகள் உள்ளன.என்னால் முடியாது.''
''பரவாயில்லை,அதில் கடைசி இரு பதங்களை மட்டும் படி.''
''அதற்கு என்ன பொருள் என்று நீங்களே சொல்லி விடுங்களேன்.''
''கவலைப்படாதே என்று பொருள்.''
''எப்பொழுது கவலைப்படாமல் இருக்கலாம்?''
''''பகவான் சொன்னபடி செய்தால் கவலைப் பட வேண்டாம்.''
''அப்படி பகவான் என்னதான் சொன்னார்?''
''அது முழு கீதையையும் படித்தால்தான் தெரியும்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment