உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வயதானால்...

0

Posted on : Wednesday, February 22, 2012 | By : ஜெயராஜன் | In :

பெரும்பாலும் முதுமை எய்தியவர்கள் புலம்புவதுண்டு,''என் பிள்ளைகள் என் பேச்சைக் கேட்பதில்லையே,''என்று.பெற்றோர்களே,ஒன்றை யோசித்துப் பாருங்கள்.உங்கள் பிள்ளைகள் பின்னால் வந்தவர்கள்.நீங்கள் பிறக்கும்போதே உங்களுடன் வந்தவை உங்கள் கையும்,காலும்.வயதாகிவிட்டால்,உங்கள் கையும் காலுமே உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே?வாரிசுகள் கேட்காததில் என்ன வியப்பிருக்கிறது?
                                  --திருக்குறள் முனுசாமி.
கடந்த காலமோ திரும்புவதில்லை.
நிகழ காலமோ விரும்புவதில்லை.
எதிர்காலமோ அரும்புவதில்லை.
இதுதானே அறுபதின் நிலை!
                                 --வாலி.
அறுபதில் முகத்தில் ஏற்படும் வரிதான் முதுமையின் முகவரி.
                                   --வாலி.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment