உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எளிய வழி

0

Posted on : Tuesday, February 14, 2012 | By : ஜெயராஜன் | In :

அரசன் ஒருவன் தன் குடி மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை நேரில் அறிய நினைத்து தன் நாட்டின் பல பகுதிகளுக்கும் நடந்தே சென்றான்.சென்ற இடங்களில் எல்லாம் மேடு பள்ளமும் முட்கள் நிறைந்தும்  இருந்தன.எனவே அவன் அரண்மனை திரும்பியதும் ஒரு ஆணை பிறப்பித்தான்.அதாவது ஒவ்வொரு ஊர் மக்களும் தங்கள் பகுதியில், நடக்கும் பாதை முழுவதும் தோல் விரிக்க வேண்டும்.அப்போது யார் காலிலும் முள் குத்தாது என்று அவன் கருதினான்.மக்கள் மலைத்தார்கள்.பாதை முழுவதும் தோல் விரிக்க எத்தனை விலங்குகளைக் கொல்லவேண்டுமோ ,முதலில் அத்தனை விலங்குகள் கிடைக்குமா என்று அஞ்சினர்.அறிவுள்ள அமைச்சர் ஒருவர் அரசனை அணுகி,''அரசே,நீங்கள் நடக்கும்போது முள் குத்தினால் உங்கள் காலில்  மட்டும் தோல் அணிந்தால் போதுமே?எதற்காகப் பாதை முழுவதும் விரிக்க வேண்டும்/''என்று கேட்டான் அரசனும் அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டான்.
நம் வாழ்க்கையிலும் அப்படித்தான்,இந்த உலகமே சரியில்லை என்று கோபம் கொள்வதை விடுத்து,முதலில் நம்மை சரி செய்து கொண்டால் உலகமே சரியாகிவிடுமே!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment