உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அமைதி

0

Posted on : Sunday, February 26, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு விவசாயி தன கைக் கடிகாரத்தைக் கழட்டி வைத்துவிட்டுத் தன் மாட்டுக் கொட்டத்தில் வேலை பார்த்து முடித்தபின் தன் கைக் கடிகாரத்தைத் தேடியபோது அது கிடைக்கவில்லை.தீவிர முயற்சியின் பின்னும் அது அகப்படவில்லை.அந்தக் கடிகாரத்தைப் பொறுத்தமட்டிலும் அது அவனுக்கு ஒரு விலை மதிப்பிடமுடியாத ஒரு பொருள் ஏனென்றால் அது இறந்துபோன அவன் தந்தை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தது.
அப்போது அருகில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை அவன் கண்டான்.அவர்களை அழைத்து விவரம் சொல்லித் தேடச் சொன்னான்.எடுத்துக் கொடுப்பவருக்குத் தக்க பரிசு கொடுப்பதாகவும் உறுதி அளித்தான்.சிறுவர்கள் உடனே ஆர்வத்துடன் உள்ளே நுழைந்து இருந்த எல்லாப் பொருட்களையும் தலை கீழாகப் புரட்டியும் கடிகாரம் கிடைத்த பாடில்லை.விரக்தி அடைந்த விவசாயி அனைவரையும் வெளியே போகச் சொல்லி மாட்டுக் கொட்டத்தின் கதவைப் பூட்டினான்.
அப்போது ஒரு சிறுவன் அவனிடம் தனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க வேண்டினான்.அவனுடைய ஆர்வத்தைப் பார்த்த விவசாயியும் கதவை மறுபடியும் திறந்து அவனை உள்ளே அனுமதித்தான்.சிறிது நேரத்தில் அச்சிறுவன் கையில் கடிகாரத்துடன் வந்தான் .ஆச்சரியப்பட்ட விவசாயி சிறுவனிடம் அவனால் மட்டும் எப்படி கண்டு பிடிக்க முடிந்தது என்று கேட்டான்.சிறுவன் சொன்னான்,''உள்ளே சென்றதும் நான் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உன்னிப்பாகக் கவனித்தேன்.அப்போது ஒரு இடத்திலிருந்து கடிகாரத்தின் டிக் டிக் ஓசை தெளிவாகக் கேட்டது.அதை வைத்து கடிகாரத்தின் இருப்பிடம் அறிந்து எடுக்க முடிந்தது,'' விவசாயி சிறுவனின் அறிவுத்திறம் கண்டு வியந்து பாராட்டி பரிசளித்தான்.
எந்த வேலையையும் அமைதியாகச் செய்தால் அதை சிறப்பாகச் செய்ய முடியும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment