உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஜெயகாந்தன்

0

Posted on : Wednesday, February 15, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பாவத்திலிருந்து தனி ஒரு மனிதன் தப்பித்துக் கொள்வதா பிரச்சினை?அந்தப் பாவமே முற்றாகத் தவிர்க்கப்படுவதற்கு என்ன வழி?அப்படித் தவிர்க்கவொண்ணாத ஒரு செயல்-ஒரு தொழில்-ஒரு வாழ்க்கை முறை எப்படி ஒரு பாவமாகும்?
**********
அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதேயில்லை.காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும்.சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்.மெய்யான இலட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை.அவை மக்கினாலும் மடிந்து விடுவதில்லை.
**********
கொள்கைகளாலும், மரபுகளாலும் மதங்கள் அமைந்ததாகச் சொல்கிறார்கள்.இல்லை..இல்லை,அது குல்லாய்களாலும்,குடுமிகளாலும்,சில குறிப்பிட்ட அந்நியச் சொற்களைக் கலந்து தாய்மொழியில் பேசுவதாலும்,வேறு சில புறத் தொற்றங்களாலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
**********
ஒரு குழந்தை நடப்பதற்கு நடை வண்டி வேண்டும்.அதை வாங்கித் தரும் பெற்றோர்கள் அப்புறம் அதை தூக்கி பரண் மேல் போடவும் தயாராயிருக்க வேண்டும்.எக்காலத்துக்கும் தங்கள் குழந்தைகள் நடை வண்டியைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.
**********
குழந்தைப் பருவத்தில் தமது பிள்ளைகளின் குறைகளை எப்படி அவர்கள் சகித்து அன்பு காட்டி வளர்க்கிறார்களோ,அதைப்போல வயது வந்தபின் பெரியோர்களின் குழந்தைத்தனங்களைஎல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியது புத்திரர்களின் கடமை.
**********
ஒரு குடும்பத்தில் இல்லாமையும் வறுமையும் இருப்பது கூடக் கொடுமையல்ல.அது காரணமாக அவர்கள் அன்பற்றவர்களாகவும்,பண்பற்றவர்களாகவும்  ஆகி விடுகிறார்களே,அதுதான் கொடுமை.
**********
வளர்ந்தவர்களும்,அறிவு பெற்றவர்களும் நமது துன்பதுயரங்களுக்கான  காரணங்களை ஆராய்ந்து கூறிவிட்டு,நம்மை விட்டு அவர்கள் ஒதுங்கி விடுகிறார்களே,பிறகு நம்மவர்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்?
**********
     '' ஈஸ்வர அல்லா தேரே நாம் ''என்னும் நூலில் ஜெயகாந்தன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment