உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புதிர் போடுவோமா?

0

Posted on : Thursday, February 23, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் இரு சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெரிய ஆறு குறுக்கிட்டது.அங்கு ஒரு படகு, ஆள் இல்லாமல் இருந்தது.அவர்கள் அனைவரும் அந்தப் படகின் உதவியுடன் ஆற்றைக் கடக்க முடிவு எடுத்தனர்.படகில் சில குறிப்புகள் இருந்தன;
தாங்கக் கூடிய எடை;120 கிலோ கிராம்.
அவர்களால் ஆற்றைக் கடக்க முடியுமா?
தந்தையின் எடை 82kg
தாயார் எடை79kg
மூத்த சிறுவன் எடை  65kg
இளைய சிறுவன் எடை 50kg.

விடை;
அவர்களால் ஆற்றைக் கடக்க முடியும்.
முதலில் இரு சிறுவர்களும் ஆற்றைக் கடக்க வேண்டும்.
அடுத்து மூத்தவன் இளையவனை அக்கரையில் விட்டுவிட்டு திரும்ப இக்கரைக்கு வர வேண்டும்.
தாய் படகை எடுத்துக் கொண்டு அக்கரை சென்று இறங்கிக் கொள்ள வேண்டும்.
இளையவன் படகை எடுத்து இக்கரை வரவேண்டும்.
திரும்பவும் இரு சிறுவர்களும் படகில் அக்கரைசெல்ல வேண்டும்.
மறுபடியும் மூத்தவன் இளையவனை இறக்கிவிட்டு இக்கரை வர வேண்டும்.
தந்தை இப்போது படகை எடுத்துக் கொண்டுபோய் அக்கரையில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
இளையவன் படகை எடுத்துக் கொண்டு இக்கரை வர வேண்டும்.
இரண்டு சிறுவர்களும் படகில் ஏறி அக்கரையில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது அனைவரும் அக்கரை போய் சேர்ந்து விட்டனர் அல்லவா?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment