உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உங்கள் அடையாளம் என்ன?

0

Posted on : Tuesday, February 28, 2012 | By : ஜெயராஜன் | In :

கவலைப் படுவதற்கான காரணிகளைத் தேடித்தேடி கவலைப் பட்டுக் கொண்டிருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
**********
நம் அக்கறை சிரிக்கக் கூடாது என்பதில் இல்லை....உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்ற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.
**********
தோற்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக நீங்கள் ஜெயிக்கப் பார்த்தால்,தோல்வி தான் உங்களுக்கு மிஞ்சும்.
**********
ஒரு வேலையை விரும்பிச் செய்கின்றபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை.வருந்திச் செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது.
**********
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க யாராலும் முடியாது.நீங்கள் தப்பு செய்ய வேண்டும் என்று நினைக்காமல் செய்யும் எந்த செயலுக்காகவும்,சம்பந்தமில்லாதவர்களின் விமரிசனங்களுக்காகப் பயந்துகொண்டு அதை செய்யாமல் முடங்கிப் போகாதீர்கள்.
**********
யோசித்துப் பார்த்து பிரச்சினை என்னவென்று கண்டு பிடித்துவிட்டால்....அதனைத் தீர்க்க வேண்டுமே...அதனை சந்திக்க வேண்டுமே....அதற்குப் பதிலாக இப்படி முனகிக் கொண்டே இருந்தால் அதுவாகவே சரியாகிவிடும் என்பது நம் எண்ணம்.
**********
உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுத் தர மாட்டேன் என்று நீங்கள் சண்டை போட்டால் அதற்குப் பெயர் கொள்கை அல்ல,மனோவியாதி.
**********
உங்கள் பிள்ளைக்கு தெரியாமல் வெளிப்படுத்த அன்பு ஒன்றும் மோசமான விஷயமில்லையே.நீங்கள் இரும்புதான்-அந்தப் பதக்கத்தைக் காப்பாத்த எத்தனை நாளைக்கு இப்படி மனசுக்குள்ளேயே அன்பை சுமந்து கொண்டு திரிவீர்கள்?
**********
இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால் இந்த ஒட்டு மொத்த உலகிற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
**********
உங்களை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே,நீங்கள் ஏன் இதுவரை யாரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை?
**********
உங்கள் மனம் ஒரு தொட்டி.அதைக் குப்புறக் கவிழ்த்து வையுங்கள்....இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டிவிட்டுப் போவார்கள்.
**********
        ---கோபிநாத் எழுதிய,''ப்ளீஸ்!இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!''என்ற புத்தகத்திலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment