உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தித்திப்பு

0

Posted on : Wednesday, February 22, 2012 | By : ஜெயராஜன் | In :

வேதாரண்யத்தில் ஒரு கோவில் கதவு என்ன காரணத்தினாலோ மூடியே இருந்தது.யாராலும் அந்தக் கதவைத் திறக்க முடியவில்லை.அவ்வூருக்கு சம்பந்தரும் திருநாவுக்கரசரும் வந்தனர்.கதவு திறக்க வேண்டும் என சம்பந்தர் ஒரு பாட்டைப் பாடினார்.உடனே கதவு திறந்தது.மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர்.எல்லோரும் வெளியே வந்தபின் திறந்த கதவை மூட முயற்சித்தபோது அதை அடைக்க இயலவில்லை.இப்போது கதவை மூட வேண்டி திருநாவுக்கரசர் பாட ஆரம்பித்தார்.ஒன்று,இரண்டு, என வரிசையாகப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்.பதினோரு பாடல்கள் பாடி முடிந்தவுடன் கதவு தானே மூடிக் கொண்டது.திருநாவுக்கரசர் சம்பந்தரிடம் சொன்னார்,''நீங்கள் பாடிய ஒரே பாட்டில் கோவிலின் கதவு திறந்தது.கதவை மூட எனக்கோ பதினோரு பாடல்கள் பாட வேண்டி வந்தது.தங்கள் மகிமையின் முன் நான் சிறியவன் என்பதை இறைவன் இதன் மூலம் எனக்கு உணர்த்தி விட்டான்.''சம்பந்தர் சொன்னார்,''நாவுக்கரசரே,தாங்கள் நினைப்பது தவறு.என்னுடைய ஒரு பாட்டே இறைவனை சலிப்படைய வைத்துவிட்டது.எனவேதான் என் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டான்.ஆனால் உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய்த் தித்திக்கவே இறைவன் உங்களைத் தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment