உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பிடித்திருப்பது யார்?

0

Posted on : Saturday, February 04, 2012 | By : ஜெயராஜன் | In :

இரண்டு நண்பர்கள் ஒரு ஆற்றங்கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது ஆற்றில் ஒரு மூட்டையொன்று மிதந்து வருவது தெரிந்தது.அந்த மூட்டைக்குள் என்ன இருக்கும் என்று இருவரும் யோசித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.இருவரில் ஒருவனுக்கு அதில் ஏதேனும் விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்க வேண்டும் என்று தோன்றியது.உடனே கொஞ்சமும் யோசியாது ஆற்றினுள் தவ்வி நீந்திச்சென்று அந்த மூட்டையைப் பிடித்தான்.அப்போதுதான் தெரிந்தது.அது மூட்டையல்ல;உயிருக்குப் போராடிக் கொண்டுயருந்த ஒரு கரடி அது என்பது..அந்தக் கரடியும் உயிர் தப்பிக்கும் எண்ணத்தில் அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது.இதை அறியாத கரையில் இருந்த நண்பன் ,''மூட்டையைக் கொண்டு வருவது சிரமமாக இருந்தால் அதை விட்டுவிடு.அதற்காக உயிரைப் பணயம் வைக்காதே,''என்றான்.அதற்கு அவன் சொன்னான்,''மூட்டையை நான் பிடிக்கவில்லை.மூட்டை தான் என்னைப் பிடித்துக் கொண்டுள்ளது.''
இதுபோல உலகப் பற்றுக்களை நாம் தான் பிடித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அவை நம்மைப் பிடித்துக் கொண்டு இருக்கவில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment