உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சொல்ல மாட்டேன்.

0

Posted on : Monday, April 30, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவும் அவர் மனைவியும் பூங்கா ஒன்றில் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது.இருட்டிய சமயத்தில் இளம் காதலர் இருவர் பெஞ்சின் மறு முனையில் அமர்ந்தார்கள்.காதலன் ,காதலியிடம் லேசான குரலில் அன்புடன் பேசிக் கொண்டிருந்தான்.முல்லாவின் மனைவி முல்லாவிடம் சொன்னார்,''இதோ பாருங்கள்,நாம் இங்கு அமர்ந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை .அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டிருக்கிறான்.நீங்கள் நாம் இருப்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவர சிறிது இருமி எச்சரிக்கை செய்யுங்கள்.''முல்லா சொன்னார்,''நான் ஏன் எச்சரிக்க வேண்டும்.நாம் காதலித்தபோது இதே மாதிரி சூழ் நிலையில் என்னை யாரும் அன்று எச்சரிக்கவில்லையே?''
**********
முல்லா ஒரு கார் வாங்கினார்.வாங்கின நாளிலிருந்து தினமும் ஏதாவது பிரச்சினை.நேரே அக்காரை அவரிடம் விற்றவரிடம் சென்றார்.''அய்யா,அன்று நீங்கள் இந்தக் காரை விற்கும்போது இந்தக் காரைப் பற்றி என்னவெல்லாம்  சொன்னீர்களோ அதைத் திரும்பச் சொல்லுங்கள்.''என்றார் .அவரும் காரை விற்பதற்காக மிகைப்படுத்திச் சொன்னவற்றை மீண்டும் சொன்னார்.முல்லா  சொன்னார்,''அந்தக் கார் வாங்கியதிகிருந்து நொந்து போய் இருந்தேன்.நல்ல வேளை! எங்கே நான் எமாந்துவிட்டேனோ என்று நினைத்தேன்.''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment