உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அறிஞரின் கதி

0

Posted on : Friday, April 13, 2012 | By : ஜெயராஜன் | In :

பெர்னாட்சா தன் வீட்டில்,அவரைக் காண வந்தவர்களிடம் பல நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.வந்தவர்கள் முகத்தில் மிக்க மகிழ்ச்சி.இவ்வளவு நல்ல அறிவுரைகளை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர்களுக்கு ஒரு பெருமிதம்.மிகக் கவனமுடன் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது ஷாவின் மனைவி தையல் மெஷினில் ஒரு துணியைத் தைத்துக் கொண்டிருந்தார்.அவருடைய முழு கவனமும் தையல் மெஷினில் தான் இருந்தது.அவர் ஷாவின் பேச்சைக் கொஞ்சம் கூடக் கவனிக்கவில்லை.வந்தவர்களில் ஒருவருக்கு இது மிக வித்தியாசமாகப் பட்டது.பொறுக்க முடியாமல் அவர் ஷாவின் மனைவியைப் பார்த்து,''அம்மா,அய்யா எவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்!நாங்கள் எல்லாம் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லையே,ஏன்?''என்று கேட்க ஷாவின் மனைவி சொன்னார்,''ஏற்கனவே அவர் சொல்லி ஆயிரம் முறை நான் கேட்ட விஷயங்களைத்தான் சொல்லிக் கொண்டிருப்பார் என்பது எனக்குத் தெரியாதா?நல்ல வேளை  என் கைகள் தையல் மெஷின் வேலையில் ஈடுபட்டுள்ளன..இல்லாமல் போனால் அவர் பேசுவதைக் கேட்க வேண்டி வரும்,அப்போது என் கைகள் அவர் கழுத்தை நெறுக்கிக் கொன்றிருக்கும்.''ஷா உலகத்துக்குத்தான் பெரிய அறிஞர்.ஆனால் அவர் வீட்டிலோ................

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment