உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அங்கீகாரம்

0

Posted on : Monday, April 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு அரசியல் கட்சியை தேர்தல் கமிசன் எப்படி மாநிலக் கட்சியாகவும் தேசீயக் கட்சியாகவும் அங்கீகரிக்கிறது?
*ஒரு மாநிலத்தின் சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி,பதிவாகும் ஓட்டுக்களில் ஆறு %பெற்றிருக்க வேண்டும்.(ஒரு சட்டசபை உறுப்பினர் கூடத் தேர்ந்தெடுக்கப்படாவினும் மாநிலக் கட்சியாகும்.)
*ஆறு % வாக்குகள் பெறாவிடினும் முப்பது சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மாநில அங்கீகாரம் உண்டு.
*மூன்று மாநிலத்தில் ஒரு கட்சி அங்கீகாரம் பெற்றால் அது தேசீயக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
*25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தேசீய அங்கீகாரம் உண்டு.(ஆறு %வாக்குகள் பெறாவிட்டாலும்,ஒரு சட்ட மன்ற உறுப்பினர் கூட இல்லாவிடினும்)
இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சி நமது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அதற்கென ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிட இயலும்.


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment