உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏன் கூச்சம்?

0

Posted on : Saturday, April 07, 2012 | By : ஜெயராஜன் | In :

நம் தோலில் பாதம்,உள்ளங்கை முதலிய இடங்களில் தொடு உணர்வு செல்கள் அதிகம் உள்ளன.இவை தம் மேற்போர்வையை இழந்து காணப்படுவதால் குறைந்த பட்ச உணர்வுத் தூண்டுதல்களையும் துல்லியமாகக் கடத்தும் திறன் பெற்றிருக்கின்றன.எனவே இந்தத் தொடு செல்கள் மிகுந்த பாதம் முதலிய பாகங்களை லேசாக வருடினால்கூடக் கூச்சம் ஏற்படுகிறது.
**********
நமக்கு சளி பிடிக்கும்போது மூக்கிலுள்ள mucus membrane வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படும்.அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க mucus membrane நிறையத் தண்ணீரை நமது இரத்தம் மற்றும் வெள்ளை அனுக்களிடம் இருந்து  உற்பத்தி  செய்யும்.இந்தத் தண்ணீர் வைரஸ் கிருமிகளைத் தாக்கும்.இதனால்தான் நமக்கு சளி பிடித்தால் மூக்கில் தண்ணீராய் வடிகிறது.
**********
புரோட்டின் என்பது கார்பன்,ஹைட்ரஜன் ,நைட்ரஜன்,ஆக்சிஜன்,சல்பர் ஆகியவற்றின் கலவையாகும்.இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்து வந்தது.அதன் பொருள் அடிப்படை .
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment