உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்பு வருது

0

Posted on : Saturday, January 30, 2010 | By : ஜெயராஜன் | In :

''என்னங்க,நூல் புடவை எடுத்துத் தந்துட்டு பட்டுப் புடவையின்னு சொல்றீங்களே?''
'பின்னே சும்மாவா?..இது அடிபட்டு,மிதிபட்டு,லோல்பட்டு,கடன்பட்டு வாங்கின புடவை ஆச்சே!'
***********
''உன் பேர் என்னப்பா?பேங்க்ல வாங்கின கடனை அடைச்சிட்டயா?''
'அடைக்கலசாமி.'
**********
''உங்கள் ஆபீசில் ஒரு மடையன் இருக்கிறான்.''
'எங்கள் ஆபீசில் இருபது பேர் இருக்கிறோம்.யாரை நீங்க சொல்றீங்க?'
**********
''உன்னைப் பார்த்தால் கோபால் ஞாபகம் வருது.''
'நான் ஒன்றும் கோபால் மாதிரி இல்லையே?'
''இல்லை,அவனும் எனக்கு நூறு ரூபாய் பாக்கி தரனும்.''
**********
''செருப்புப் போட்டாலும் முள் குத்தும்.அது எப்போ?''
'மீன் சாப்பிடும் போது.'
***********
''நான் பார்த்து எந்தக் கழுதை கழுத்தில் தாலியைக் கட்டச் சொன்னாலும்,உடனே என் பையன் கட்டிடுவான்.''
'உங்களுக்கு என்ன போச்சு?நாளைக்கு உதை வாங்கப் போவது அவன் தானே?'
*********
தங்களது ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாட ஒரு தாத்தாவும் பாட்டியும் ஒரு ஹோட்டலுக்குப் போனார்கள்.மேஜையில் அமர்ந்ததும் தாத்தா கேட்டார்,''இன்னொரு பாதாம் அல்வா சாப்பிடுகிறாயா?''
பாட்டி:இப்போது தானே உள்ளே நுழைந்தோம்?இன்னொரு பாதாம் அல்வா என்கிறீர்களே ?
தாத்தா: மறந்திட்டாயா?கல்யாணமான புதிதில் நாம் இருவரும் பாதாம் அல்வா சாப்பிட்டோமே?
*******
''ஒவ்வொரு சனிக்கிழமையும், என் மனைவியைப் பார்க்க மதுரைக்குப் போய்விடுவேன்.''
'அப்போ உங்க மனைவி, சனி எப்போடா வரும்னு நினைச்சுக்கிட்டே இருப்பாங்களோ?'
*******
கணவன்:நான் வாங்கிக் கொடுத்த புதுச் சட்டை நல்லாயிருக்கா?
மனைவி:உங்களை மாதிரியே இருக்கு.
கணவன்:என்னை மாதிரியா?எப்படி?
மனைவி:லூசா இருக்கு.
*********
''உங்க பையன்களோட பேர் என்னாங்க?''
மூத்தவன் பிரத்யுமணன்.அடுத்தவன் விஷ்வக்சேனன்.மூன்றாமவன் பேர் ஜாங்கிரி.
''அதென்னங்க ஜாங்கிரின்னு பேரு?''
'என் மனைவிதான்,முதல் இரண்டு பேரும் வாயில் '.நுழையவில்லை.மூன்றாவது பையனுக்காவது வாயில் நுழையிற மாதிரி பேர் வைக்கச் சொன்னாள்.அதனால தான் வாயில நுழையிற மாதிரி பேர் வச்சேன்.'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment