உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சங்கடம்

0

Posted on : Tuesday, January 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆபிரஹாம் லிங்கன் ஜனாதிபதி பதவி ஏற்று முதல் உரையாற்றிய தினம்.அவர் ஒரு ஏழை செருப்புத் தைப்பவரின் மகன்.எனவே பணக்காரர்கள்,உயர் குலத்தோர் மிகவும் எரிச்சலடைந்தனர்;கோபப்பட்டனர்;ஆத்திரமுற்றனர்.அவர் பேச எழுந்த போதுஒரு பணக்காரர் எழுந்து நின்றார்.''மிஸ்டர் ஜனாதிபதி,பேசத்தொடங்குமுன் ஒன்றை நினைவூட்டுகறேன்.உங்கள் தந்தை என் குடும்பத்தினருக்கு செருப்புத் தைத்தவர்.ஜனாதிபதி ஆகி விட்டதால் பூரிப்பு அடையாதீர்கள்.நான் அணிந்த காலணிகளும் உங்கள் தந்தை தைத்தவையே.நீங்கள் ஒரு செருப்பு தைப்பவரின் மகன் என்பதை மறவாதீர்கள்.''
எங்கும் அமைதி நிலவியது.லிங்கன் மனம் வருந்துவார் என அனைவரும் எண்ணினர்.ஆனால் லிங்கன் சங்கடப்படவில்லை.மாறாக,அவர் சபை முழுவதையும் சங்கடப்படுத்திவிட்டார்.அவர் கூறினார்,''நல்லது.என் தந்தையைப் பற்றி நினைவு படுத்தியதற்கு நன்றி.அவர் ஒரு அருமையான செருப்பு தைப்பவர்.நான் அவரளவு அருமையான ஜனாதிபதியில்லை.அவர் தைத்துத் தந்த காலணிகளை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்.அதில் ஏதேனும் கோளாறு இருப்பின் என் அப்பா இறந்துவிட்டாரே என வருந்தாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்.நான் ஒரு கத்துக் குட்டி தான்.ஆனால் நான் அவற்றைச் சரி செய்து தர முடியும்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment