உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வித்தியாசம்

0

Posted on : Monday, January 11, 2010 | By : ஜெயராஜன் | In :

காட்டு வழியே சென்று கொண்டிருந்த வழிப் போக்கன் ஒருவன்,கறுப்பு வெள்ளை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை கவனித்து அந்த ஆடுகளை மேய்ப்பவனிடம் கேட்டான்,''தம்பி,இந்த ஆடுகள் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் தின்னும்?''
ஆடு மேய்ப்பவன்:வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்
ஆ.மே; ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள் எவ்வளவு தின்னும்?
ஆ.மே.;அவையும் ஒரு கூடை புல் தின்னும்.
வ.போ.;ஒரு ஆடு எவ்வளவு கம்பளி தரும்?
ஆ.மே.;வெள்ளை ஆடுகளா,கறுப்பு ஆடுகளா?
வ.போ.;வெள்ளை ஆடுகள்.
ஆ.மே.;அவை வருஷம் ஒன்றுக்கு மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;அப்படியானால்,கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் மூன்று கிலோ கம்பளி தரும்.
வ.போ.;(எரிச்சலுடன்)ஏன் இப்படி கறுப்பு ஆடுகளையும் வெள்ளை ஆடுகளையும் இனம் பிரித்துக் கூறுகிறாய்?
ஆ.மே.;ஏனெனில் வெள்ளை ஆடுகள் எங்கள் அப்பாவுக்குச் சொந்தமானவை.
வ.போ.;அப்படியானால் கறுப்பு ஆடுகள்....?
ஆ.மே.;அவையும் எங்க அப்பாவுக்குச் சொந்தமானவை தான்.
அதற்கு மேல் கேள்வி கேட்க வழிப்போக்கனுக்குப் பைத்தியமா பிடித்திருக்கு?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment