உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பேச்சுக்கலை

1

Posted on : Wednesday, January 13, 2010 | By : ஜெயராஜன் | In :

பிறர் மனம் புண்படாமல் பேசுவது ஒரு கலை.
நண்பரின் வீட்டிற்கு ஒருவர் சென்ற போதுஅவருக்கு ஒரு தட்டில் ஜிலேபி வைத்தார் நண்பரின் மனைவி.ஜிலேபியை இரண்டாக விண்ட போது அதில் நூல் போல் வந்தது.சிரமப்பட்டு அதை சாப்பிட்டு விட்டார்.நண்பர் கேட்டார்.''ஜிலேபி எப்படி இருந்தது?''இவர் சொன்னார்,'மிக நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் தாமதமாக வந்து விட்டேன்.'
நண்பர் மனைவியிடம் வாழைப்பழம் கொண்டு வந்து கொடுக்கச் சொல்ல அவரும் தட்டில் கொண்டு வந்து வைத்தார்.அது சற்றுக் காயாக இருந்தது.இதையும் சிரமப்பட்டு சாப்பிட்டார் வந்தவர்.நண்பர் கேட்டார்,''வாழைப்பழம் நன்றாக இருந்ததா?''வந்தவர் சொன்னார்,'நன்றாக இருந்தது.நான் தான் இரண்டு நாள் முன்னால் வந்து விட்டேன்.'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமை

Post a Comment