உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்பு

0

Posted on : Saturday, January 23, 2010 | By : ஜெயராஜன் | In :

''எட்டாம் வகுப்பு கணக்கு புத்தகம் என்ன விலை?''
'பத்து ரூபாய்.'
''கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.''
'அதெல்லாம் ஸ்கூல்லதான் சொல்லிக் கொடுப்பாங்க.இங்க இல்லை.'

************
ஒருவன்:நீ எப்போதும் திக்குவாயா?
மற்றவன்:இல்லை,பேசும்போது மட்டும் தான்.

*************

ஒருவன்:நான் இந்த அளவுக்கு சம்பாதிப்பதற்குக் காரணம் என் மனைவி தான்.
மற்றவன்:அவர் தரும் ஊக்கமா?
முதல்வன்:இல்லை,அவள் செலவழிக்கும் செலவு.

**************

மகனுக்கு உடல் நலம் இல்லை என்று பார்க்க வந்தார் தந்தை.அவனுடைய அறையினுள் நுழைய முற்படும்போது ஒரு பெண் வெளியே வந்தாள்.
மகன் சொன்னான்,''அப்பா,காய்ச்சல் போய் விட்டது.''
அப்பா சொன்னார்,'ஆம்,நான் உள்ளே வரும் பொது அது வெளியே போனதைப் பார்த்தேன்.'

**************

ஒரு இளவரசன் பருமனாக இருந்தான்.அவன் உடல் இளைக்க ஒரு குதிரை கொண்டு வரப்பட்டது.இளவரசன் தினம் குதிரை ஏற்றம் பழகினான்.ஒரு மாதத்தில்......குதிரை இளைத்து விட்டது.

**************

''ரேஷன் கடையில என்ன போடுறாங்க?''
'சப்தம் போடுறாங்க.'

*************

ராமு:டேய்,ஒரு பாட்டுப் பாடுடா!
சோமு:சினிமாப் பாட்டா,தனிப் பாட்டா?
ராமு:சினிமா பாட்டுப் பாடேன்.
சோமு:காதல் பாட்டா,தத்துவப் பாட்டா?
ராமு:காதல் பாட்டு.
சோமு:சோலோவா,டூயட்டா?
ராமு:சோலோ.
சோமு:பழைய பாட்டா,புதுப் பாட்டா?
ராமு:உன்னைப் போய்ப் பாடச் சொன்னேனே,என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்.
சோமு:என் செருப்பாலா,உன் செருப்பாலா?

*************

நண்பர்:நீங்கள் காந்தியடிகளை விட ஒரு படி மேல்.
அரசியல்வாதி:ஹி,ஹி ,எப்படிச் சொல்கிறீர்கள்?
நண்பர்:காந்தி நூல் நூற்கத்தான் சொன்னார்.நீங்கள் கயிறாகவே திரிக்கிறீர்களே!

*************

ஹோஜா என்பவன் ஒரு புத்திசாலியை முட்டாளாக்க நினைத்தான்.அவரிடம் கேட்டான்,''முட்டாள்கள் சொல்லக்கூடிய இரண்டு வார்த்தைகள் என்ன,தெரியுமா?''புத்திசாலி,'எனக்குத்தெரியாது,'என்றார்.''சரியான பதிலைச் சொல்லி விட்டர்கள்,''என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் ஹோஜா.

************

சாலையில் நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது ஸ்கூட்டர் ஒன்று மோதி விட்டது.
ஒருவர்:பார்த்து ஸ்கூட்டரை ஓட்டக் கூடாதா?
ஸ்கூட்டர்காரர்:நீர் தான் பார்த்து நடக்கணும்.நான் பத்து வருடமா ஸ்கூட்டர் ஓட்டுறேனாக்கும்.
ஒருவர்:சாரி ஜென்டில்மேன்,நான் நாற்பது வருடமா நடக்கிறேன்.நீர் தான் பார்த்து ஓட்டனும்.

**************

டானிக் தயாரிக்கும் கம்பெனியைப் பாராட்டி ஒரு பெண் கடிதம் எழுதினாள்,
''உங்களது தயாரிப்பு பிரமாதம்.முன்பெல்லாம் என்னால் என் குழந்தையைக் கூட அடிக்க முடியாது.இப்போது என் கணவரையே அடிக்கக் கூடிய அளவுக்கு பலம் கூடியுள்ளது.''

***************

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment