உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கண்ணாடி தரும் பாடம்

1

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

1நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கரையோ பட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது.அந்தக் கரையைக் கண்ணாடி கூட்டிக் காட்டுவதும் இல்லை;
குறைத்துக் காட்டுவதும் இல்லை.உள்ளது உள்ளபடி காட்டுகிறது.
அதே போல் உன் சகோதரனிடம்,நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ,அந்த அளவுக்குத்தான் சுட்டிக் காட்ட வேண்டும்.எதையும் மிகையாகவோ,ஜோடித்தோ,துரும்பைத் தூனாக்கவோ,மலையை கடுகாகவோ ஆக்கக்கூடாது.
2கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் அது உன் குறையைக் காட்டுகிறது.நீ அகன்று விட்டால் கண்ணாடி மவுனமாகிவிடும்.
அதேபோல்,மற்றவர்களின் குறைகளை அவர்களிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும்.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
3ஒருவருடைய குறையைக் கண்ணாடி காட்டுவதால் அதன் மீது யாரும் கோபமோ எரிச்சலோ படுவதில்லை.
அதேபோல்,நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமானால் திருத்திக் கொள்ள வேண்டும்.
கருத்து: முகம்மது நபிகள்

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமையான தகவல்கள்!!!

Post a Comment