உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முத்து எங்கே?

0

Posted on : Sunday, January 10, 2010 | By : ஜெயராஜன் | In :

நதிக்கரையில் இருந்த ஞானியைப் பார்க்க பெரிய கூட்டம்.பெரிய பணக்காரர் ஒருவர் பொறுமையின்றிக் காத்திருந்து தன முறை வந்த போது,தான் பணக்காரன் என்பதை உணர்த்த இரண்டு விலை உயர்ந்த முத்துக்களைக் கொடுத்தார்.ஞானி அதை வாங்கிப் பார்த்து விட்டு அதில் ஒன்றை நதியில் நழுவ விட்டார்.முத்து நதியில் விழுந்து விட்டது.பணக்காரர் அதிர்ச்சியடைந்து முத்தைத் தேட ஆரம்பித்தார்.கிடைக்கவில்லை.ஞானியிடம் வந்தார்.''அந்த முத்து எங்கே விழுந்தது என்று காட்டுங்கள்.''என்று அவரிடம் கேட்டார்.ஞானி இன்னொரு முத்தையும் நதிக்குள் வீசி,''இந்த முத்து விழுந்த இடத்தில் தான் முதல் முத்தும் விழுந்தது.''என்று மிக அமைதியாகக் கூறி விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment