உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாழ்க்கையின் அர்த்தம்

1

Posted on : Saturday, March 09, 2013 | By : ஜெயராஜன் | In :

நமது தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி வீரர் பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அவரைப் பார்க்கச் சென்ற அவரது தோழர் ஜெயதேவ் கபூர்  என்பவர் அவரைப் பார்த்து,''சர்தார்,நீ மரணத்தை நெருங்கி விட்டாய்.ஆனால் இதற்காக நீ கவலைப்பட்டது மாதிரியே தெரியவில்லையே!''எனக் கேட்டார்.அதற்கு பகத்சிங் சொன்னார்,''நான் புரட்சிப் பாதையிலே அடி எடுத்து வைக்கும்போதே,என் உயிரை அர்ப்பணித்து,'இன்குலாப் சிந்தாபாத்'என்னும்  முழக்கத்தை நாடு முழுவதும் பரவச்செய்ய முடிந்தால் அதிலேயே என் வாழ்க்கையின் அர்த்தத்தை, ,நற்பயனைக் கண்டு விடுவேன் என நினைத்தேன்.இன்று நான் இந்த சிறைக் கொட்டடியிலே அடைந்து கிடந்தாலும்,இந்த சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலே உட்கார்ந்திருந்தாலும்,கோடிக்கணக்கான மக்கள்,'இன்குலாப் சிந்தாபாத்'என்று உரக்க முழக்கமிடுவதை என்னால் கேட்க முடிகிறது.இந்த முழக்கம் சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவிக்கும் சக்தியாக ஏகாதிபத்திய வாதிகளை இறுதி வரை தாக்கிக் கொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய இவ்வளவு சின்ன வாழ்க்கைக்கு இதைவிட அர்த்தம் வேறு என்ன வேண்டும்?''(பகத்சிங் 24 வயதுக்கு முன்னரே தூக்கிலிடப்பட்டார்.)

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

வருத்தம்... ஆனால் சிறப்பு...

Post a Comment