உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அமைதியில்லாதென் மனமே...

2

Posted on : Monday, March 04, 2013 | By : ஜெயராஜன் | In :

மரியாதைக்குரிய சாமியோ சாதாரண நடைபாதை ஆசாமியோ,யாராக இருந்தாலும் சரி,ஒருவருடைய மனதுக்கு இரண்டு வகையான செயல்பாடுகள் உண்டு.ஒன்று உணர்ச்சி பூர்வமாக உணர்வது, மற்றொன்று, சிந்திப்பது.
மிகவும் பிடித்தமான ஒரு விஷயத்தை,பொருளை நம் சிந்தனைக்குத் தீனியாகக் கொடுக்கும்போது நமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. காரணம்,மனதுக்கு அது சுவை மிக்கதாகவும்,ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்து விடுகிறது.
படிப்பாக இருந்தாலும் சரி,பாட்டாக இருந்தாலும் சரி,சாப்பாடாக இருந்தாலும் சரி,முனைப்போடு பயிற்சி செய்தாலே போதும்,நமக்குப் பிடிக்காததைக் கூட மனம் ஏற்றுக் கொண்டுவிடும்.
செயலற்ற மனமோ,சிந்தனையற்ற மனமோதான் அமைதியான மனம் என்று நினைப்பது தவறு.உணர்வதும் சிந்திப்பதும் மனதுக்கு இயற்கை. அப்படியானால்  மன அமைதி என்பது என்ன?மனதுடன் நீங்கள் சண்டை போடுவதை  நிறுத்தி விட்டாலே போதும்,மனம் அமைதியாகிவிடும்.மனதை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும்.மனதுடன் மல்லுக்கு நிற்காமல் வேடிக்கை பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு மனம் ஓடி வரும்.அழகை ரசிக்கலாம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

ada...!

சரி.. மிகச்சரி...!

Post a Comment