உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன் மொழிகள்-42

1

Posted on : Tuesday, March 19, 2013 | By : ஜெயராஜன் | In :

தீயவனை நண்பனாக்கிக் கொள்வதை விடதனிமையை நண்பனாக்கிக் கொள்வது மேல்.
******
உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.
******
தன் விருப்பபடி நடந்து கொல்லும் வசதி வரும்போதுதான்
மனிதனின் துன்பங்கள் ஆரம்பம் ஆகின்றன.
******
முழுமையான நிதானத்துடன் இருக்கும் ஒருவனை முட்டாள் ஆக்க முடியாது.
******
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்.
******
மழையைக் கண்டு கலங்குபவை காகிதப் பூக்களே.
******
உன்னை அடக்குபவர் முன் நீ சுதந்திரமாக இரு.
உனக்கு சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு.
******
வீணான எண்ணங்கள் விசக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அதன்பின் அழிப்பது சிரமம்.
******
ஆகாயத்திலிருந்து பால் கொட்டினாலும் அதைப் பிடிக்கும் பாத்திரம் என்னவோ பணக்காரர்களிடம் தான் இருக்கிறது.
******
என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர்.அவர்களின் பெயர்கள்:
எங்கே? என்ன? யார்? ஏன்? எப்படி?எப்போது?
******
தோற்று விடுவோமோ என்ற பயத்தை வெல்வதுதான் உண்மையான வெற்றி.
******
மனதின் காதுகளை மூடிவிடும் ஒரே சாதனம் அச்சம்தான்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமை... உண்மைகள் பல...

Post a Comment