உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாய்ப்பாசம்

2

Posted on : Saturday, March 16, 2013 | By : ஜெயராஜன் | In :

''தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை ,சர்வேசா,கண்ணீரால்  காத்தோம்,'' என்று இந்திய விடுதலை குறித்து பாரதியார் பாடினார்.இந்திய விடுதலைக்காகத் தன்னுயிர் ஈத்த தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் வீரன் பகத்சிங்கின் தோழர் சந்திர சேகர ஆசாத்.இவர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் இருபத்தி நான்கு ஆண்டுகளே.அதிலும் அவர்  நீண்ட காலம் தலை மறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.தோழர் ஒருவர் கேட்டார்,''நீ நாடெல்லாம் சுற்றுகிறாய்.புரட்சிக் கட்சியிலே பணியாற்றுகிறாய்.எப்போதும்  போலீசார் உன்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.எப்போதாவது உன் தாயார் நினைவு வந்து கவலைப் படுகிறாயா?''உடனே ஆசாத்தின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.குரல் தழுதழுத்தது.பிறகு சொன்னார்,''தம்பி,இதுதான் என் பலவீனம்.இது போலீசாருக்கும் தெரியும்.எனவே  எப்போது நான் என் அன்னையைக் காணச் செல்வேன்,அப்போது கைது செய்யலாம் என்று காத்திருக்கிறார்கள்.நான் கைதானால் இயக்கத்துக்கு பெரிய நஷ்டம் என்பதால் நான் என் தாயை பார்க்க செல்வதே இல்லை.ஆனால் தாயின் நினைவு வரும்போதெல்லாம் நான் தரையின் மீது முழங்காலிட்டு தலையால் நிலத்தைத் தொட்டு,'அம்மா!நான் உன்னை மறந்து விட்டேன் என்று எப்போதும் நினைக்காதே!நான் என்ன செய்வேன் அம்மா?நான் உன் அருகே வர முடியாத நிலையில் இருக்கிறேன்.என்னை மன்னித்து விடு அம்மா,'என்று வேண்டிக் கொள்வேன்.''இப்படிப்பட்டவர்களின் தியாகத்தினால்தான் நாம் இன்று விடுதலையின் பலனை அனுபவித்து வருகிறோம்.ஆனால் நாம் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோமா ?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

உணர வேண்டிய கேள்வி...

nalla pakirvu !

Post a Comment