உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பித்தனாயிருக்க

1

Posted on : Saturday, March 02, 2013 | By : ஜெயராஜன் | In :

பணத்தினை வாயால் வைது ,உள்ளத்தில் பூஜை செய்து
வனப்பினைப் பழித்துப் பேசி,முகங்களைத் தொடர்ந்து நோக்கி
புலன்களை வேசி என்றும்,உயிரினைப் பகல் கனவென்றும்,
மலங்களின் மகன் என்றும் உதட்டினால் வீரம் பேசி,
நெய்யோடு பழ வகையும் தின்று மிக ஏப்பம் இட்டு
பையாகப் பொன்னும் பொருளும் சிவன் பெயரை சொல்லிச் சேர்த்து
மடங்களைக் கட்டுவித்து மனதில் இடம்பம் கொண்டு
அடங்கலும் சிவனுக்கென்று ,ராஜஸம்  பொலியப் பழகி
வில்வமும் விளக்கும் சேர்த்துப் பூசனை முழக்கம் கூட்டி
கல்வமும் மருந்தும் காட்டிச் சித்தனின் சீடனென்று
பொய் வார்த்தை சொல்லாததாலே பித்தனென்று பெயரைப் பெற்றேன்.
பித்தனாயிருக்க அருள்வாய்,பித்தரே,பித்தர் குருவே.
                                 --ந..பிச்சமூர்த்தி.கவிதை 'பிரார்த்தனை'யிலிருந்து

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

மிக்க நன்றி,நண்பரே!

Post a Comment