உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கொடை வள்ளல்

0

Posted on : Thursday, March 14, 2013 | By : ஜெயராஜன் | In :

அர்ஜுனன் கண்ணனிடம் வருத்தப்பட்டுக் கொண்டான்,''எப்போது பார்த்தாலும் சிறந்த கொடை வள்ளல் கர்ணன் தான் என்று சொல்கிறீர்கள்.நான் எந்த விதத்தில் குறைந்தவன்?.நானும்தான் என்னிடம் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குகிறேன்.''கண்ணன் சிரித்துக் கொண்டார். அப்போது  அங்கு ஒரு பிராமணன் வந்தான் .அர்ஜுனனிடம்,''என் மனைவி இறந்து விட்டாள்.அவளை எரிப்பதற்கு கொஞ்சம் சந்தனக் கட்டைகள் தேவை.எங்குமே கிடைக்க வில்லை.நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?''என்று கேட்டான் .அர்ஜுனன் உடனே ஆட்களை அழைத்து எங்கிருந்தாலும் சந்தனக் கட்டைகள் கொண்டு வரும்படி கட்டளை இட்டான்.சென்றவர்கள் திரும்ப வந்து இங்கு எங்குமே சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை என்றனர். பிராமணனுக்கு உதவி செய்ய முடியாததற்கு அர்ஜுனன் அவனிடம் மன்னிப்புக் கேட்டான்.அடுத்து பிராமணன் கர்ணனிடம் சென்றான்.கர்ணனிடம் தனது  தேவையை சொல்ல, அவனும் ஆட்களை அழைத்து எங்கிருந்தாலும் சந்தனக் கட்டைகள் கொண்டு வர ஆணை இட்டான்.அவர்களும் திரும்ப வந்து எங்குமே கிடைக்கவில்லை என்றனர்.கர்ணன் சிறிது நேரம் யோசித்து விட்டு கோடரி ஒன்று கொண்டு வரச் சொன்னான்.கோடரி வந்ததும் தனது  மாளிகையில் இருந்த சந்தனத்தால் ஆன தூண்களை வெட்டிப் போட்டான்.மாளிகை ஒரு பக்கம் சரிந்து விட்டது.அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஆட்களிடம் வெட்டிப்போட்ட சந்தனக் கட்டைகளை வண்டியில் போட்டு பிராமணனின் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க சொன்னான்.அர்ஜுனன்,பிராமணன் சந்தனக் கட்டைகளுடன் செல்வதைப் பார்த்து அதிசயத்துடன் எப்படி கிடைத்தது என்று விபரம் தெரிந்த போது வெட்கி தலை குனிந்தான்.வழக்கம்போல கண்ணன் புன்முறுவல் பூத்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment