உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பலனை எதிர்பார்த்து...

0

Posted on : Friday, March 08, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் ஞானி பால் செம் அவர்களிடம் வந்து தனக்குக் குழந்தை பிறக்க அருள் செய்யுமாறு கேட்டாள்.வேறு என்ன சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள் என்பதனை உணர்ந்த ஞானிஅவளிடம் என்ன குழந்தை வேண்டும் என்று கேட்க அவளும் ஆண் குழந்தை வேண்டும் என்று சொன்னாள். ஞானியும், ''முதலில் என் கதையைக் கேள்,''என்று சொல்லிவிட்டு தனது  கதையைக் கூற ஆரம்பித்தார்:
என் தாய்க்கும் குழந்தை இல்லாதிருந்ததால் ஒரு ஞானியிடம் சென்று இதே போல பிள்ளை வேண்டி வணங்கினாள்.அந்த ஞானியும்,''அதற்கு முதலில் அழகான தொப்பி ஒன்று செய்து கொண்டுவா,''என்றார்.மறுநாள் என் அன்னையும் ஒரு அழகான தொப்பி செய்து அவரிடம் கொடுத்தார்.ஞானி தொப்பியை தலையில் வைத்ததும்,என் தாய்,''இந்தத் தொப்பி உங்களுக்கு மிக அழகாக இருக்கிறது.எனக்காக நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இந்தத் தொப்பியை அணிந்ததற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் ''என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.அதன்பின்தான்  நான் பிறந்தேன்.
கதையைக் கேட்டதும் அப்பெண் அங்கிருந்து சென்று மறுநாள் ஒரு தொப்பியுடன்  பால் செம்மிடம் வந்தாள் .அவரும் உடனே அத்தொப்பியை  அணிந்து கொண்டார்.ஆனால் அவர் நன்றி எதுவும் சொல்லாமல் தனது  காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.சிறிது நேரம் பொறுத்த பெண் அவரிடம்,''நான்தான் தொப்பி கொடுத்து விட்டேனே.குழந்தை வரம் தாருங்கள்,''என்று கேட்டாள்.அதற்கு பால் செம் சொன்னார்,''என் கதையில் என் தாய் எந்த விதஎதிர்பார்ப்பும் இல்லாமல் தொப்பியைக் கொடுத்தார்.அதனால் நான் பிறந்தேன்.இப்போது ஒரு தொப்பியை கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக ஒரு குழந்தை  கேட்கிறாயே,இது நியாயமா?உடனே நீ இங்கிருந்து போய்விடு.திரும்ப இங்கு வராதே,''.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment