உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உடலில் மாற்றம்

1

Posted on : Sunday, March 03, 2013 | By : ஜெயராஜன் | In :

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் ,இரையைப் பெறவும்,தான் இரையாகாமல் தப்பிக்கவும் சில ஏற்பாடுகள் உடலில் நடை பெறுகின்றன.இதற்கு 'Fight or Flight Response' என்று பெயர்.இதனை Automatic Nervous System கட்டுப் படுத்துகிறது.இக்கட்டான நேரங்களில் மூளையின் ஹைப்போதாலமஸ்,பிட்யூட்டரி,மற்றும் நாளமில்லா சுரப்பிகள் இயங்கி Cortisol என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.இதே போல சிறுநீரகத்திற்கு மேல் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பிகள் அட்ரிலீன் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கின்றன.இதனால் தசை இறுக்கம்,அதிக சுவாசம்,அதிக இதயத் துடிப்பு போன்றவை ஏற்படும்.கற்கால மனிதர்களுக்கு இம்மாறுபாடுகள் பயனுள்ளவையாய் இருந்தன.கற்கால மனிதனுக்கு இருந்த பிரச்சினைகள் இப்போது நமக்கு இல்லை.எனவே இப்போது நாம் tension  அடையும்போதும் கோபப்படும்போதும் இத்தகைய ஹார்மோன்களின் தாக்கத்தால் இதயப் படபடப்பு,சுவாசப் பெருமூச்சு,அதிக வியர்வை,தலைவலி,அடிக்கடி சிறுநீர் மலம் கழித்தல்,பசி இன்மை  மற்றும் தூக்கம் இன்மை போன்றவை ஏற்படும்.தசை இறுக்கம் ஏற்படும்போது மூளைக்கு செல்லும் பிராண வாய்வு தேவையில்லாமல் தசைகளுக்கும் செல்லும்.இந்தப் பதற்றத்தால் மூளையின் செயல்பாடு குறையும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சுசூகமாக சொல்லி விட்டீர்கள்...

Post a Comment