உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கொடைவள்ளல்-2

0

Posted on : Friday, March 15, 2013 | By : ஜெயராஜன் | In :

அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை.அவருடன் வாதிட்டான்.கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.அர்ஜுனனை அழைத்து,''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால்,நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,''என்றார்.அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து,ஆட்கள் வரவர,தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான்.எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே,கண்ணன் அவனை அழைத்து,''கர்ணா,இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.கர்ணனும்,''இது என்ன பெரிய வேலையா?''என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான்.அவர்களிடம்,''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன்.வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,''என்று கூறியபடியே,சென்று விட்டான்.அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார்,''இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா?உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றவில்லையே,உன்னை எப்படி கொடை வள்ளல் என்று சொல்ல முடியும்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment