உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

செயற்கை

1

Posted on : Saturday, March 09, 2013 | By : ஜெயராஜன் | In :

நாம் சிறந்த மனிதர்களின் அடிசுவட்டில் நடக்க விரும்பாத போது, அவர்களைப் போல ஆக நினைக்காதபோது,அவர்களைத் தெய்வமாக்கிக் கோவில்களிலே பிரதிஷ்டை செய்து விடுகிறோம்.அவர்களின் சிறப்பியல்புகளை நாம்  பாராட்டுவோமே  தவிர,அவர்களை ப்போல நடந்து கொள்ள விரும்ப மாட்டோம்.நாம் மனிதனைத் தெய்வமாகச் சித்தரிக்க முயன்றால் அவனது இயற்கையான மனித உருவம் மறைந்துவிடும்.அதற்குப் பதிலாக ஒரு செயற்கையான,அருவெறுக்கத்தக்க உருவம் வெளியாகும்.அவ்விக்கிரகம் எவ்வாறாக இருந்தாலும் செயற்கையானதாகவே இருக்கும்.அதை நாம் மனப்பூர்வமாக ஆராதிக்க முடியாது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

உண்மை...

Post a Comment