உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மன்னிப்பு கேளுங்கள்.

1

Posted on : Sunday, March 03, 2013 | By : ஜெயராஜன் | In :

மன்னிப்பு கேளுங்கள்.வாழ்க்கையில் முன்னேறுங்கள்.சும்மா ஒரு பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை செய்தால் அந்த மன்னிப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்.
*மன்னிப்பு கேட்குமுன் நாம் செய்தது தவறு என்பதனை மனதார உணர வேண்டும்.இனி இத்தவறை செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும் .
*மன்னிப்பு கேட்க வெறும் வார்த்தையோ பேச்சோ போதாது.அதற்கான மாற்று நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான்நமது மன்னிப்பு முழுமையடைகிறது.
*மன்னிப்பு கேட்க முடிவு செய்து விட்டால் நாளைத் தள்ளிப் போடாதீர்கள்.தாமதப்படுத்துகிற.பொறுப்பைத் தட்டிக் களிக்கிற ஒவ்வொரு வினாடியும் பிரச்சினையை இன்னும் பெரிதாக்கும்.அதன்பின் மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை.
*நீங்கள் மன்னிப்புக் கேட்கப்போகும் நபர் உங்களைவிடக் குறைந்த நிலையில் இருந்தாலும் தயங்காது மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிடில் அந்த உறவு முழுமையாக சிதைந்துவிடும்.
மன்னிப்பு கேட்டு அது ஏற்கப்படா விட்டால் என்ன செய்வது என்று கவலைப் பட வேண்டியதில்லை.என்ன சொல்வாரோ என்று மன்னிப்பு கேட்கத் தயங்கினால் வாழ்நாள் முழுவதும் எந்தத் தவறுக்கும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை.மன்னிப்புக் கேட்பதனால்,தவறை மீண்டும் செய்ய மாட்டோம்;மற்றவர்களுடன் உறவு சீரடையும்.வாழ்க்கை சுமுகமாகும்.
          From'The one minute apology'written by Horper Collins.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

/// உங்களைவிடக் குறைந்த நிலையில் இருந்தாலும் தயங்காது மன்னிப்பு கேட்க வேண்டும். ///

அந்த தயக்கம் சிறிது கூட இருக்கக்கூடாது... ஏன் என்றால் நிலை என்பது என்றும் மாறும்...

Post a Comment