உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பிரச்சனைகளை வெல்ல...

3

Posted on : Tuesday, March 12, 2013 | By : ஜெயராஜன் | In :

சோதனைக் கட்டங்களில் ஒரு சிலர் திணறும்போது ,தோல்வி அடையும் போது,மற்றவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?அவர்கள் பிரச்சினைகளை நிதர்சனமாகவும்,நடைமுறை ரீதியாகவும் அணுகும் முறைதான் காரணம்.
*வாழும் மனிதர்  ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் உண்டு.பிரச்சினை இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மாயை.
*ஒவ்வொரு பிரச்சினைக்கும் குறிப்பிட்ட கால அளவு உண்டு. ..பிரச்சினைகளுக்கு  முடிவு உண்டு.எந்தப் பிரச்சினையும் நிலையானது அல்ல..காலம் பல பிரச்சினைகளை முடித்து வைக்கின்றது.
*ஒவ்வொரு பிரச்சினையிலும் சாதகமான சாத்தியக் கூறுகள் உள்ளன.ஒவ்வொருவருடைய பிரச்சினையிலும் உங்களுக்கோ, மற்றவர்க்கோ பயனுள்ள அம்சம் ஏதாவது ஒன்று ரகசியமாக மறைந்து கிடக்கும்.ஒருவருடைய பிரச்சினை மற்றவர்க்கு வாய்ப்பாகவும் இருக்கலாம்.
*ஒவ்வொரு பிரச்சினையும் உங்களை மாற்றக் கூடியது. பிரச்சினைகளால் மாற்றம் ஏதாவது அடையாமல் யாரும் அவற்றிலிருந்து வெளி வருவதில்லை.
*உங்கள் சோதனைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.ஆனால் எப்படி எதிர் கொள்வது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.பிரச்சினையை நீங்கள் எதிர் கொள்ளும்  விதம்தான்உங்களை மென்மையானவராகவோ, கடின மானவராகவோ,சிறந்தவராகவோ,இழிந்தவராகவோ ஆக்கும்.
* சோதனைகளை உறுதியாக எதிர் கொள்பவர்கள் நிலைக்கிறார்கள்..வாழ்வில் சோதனைகளை சமாளிப்பதில் நம்பிக்கையூட்டும் முறைகளைக் கற்றுக் கொள்கிறார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

அதுவும் இந்தக் காலத்தில் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்...

நன்றி ஐயா...

SIR REALY PROUDOF U.VERY VERY USEFUL TIPS THANK U VERY MUCH SIR

INNUM PALA VISYANGALAI ENGALUKU PAGIRUNGAL NANDRI

Post a Comment