உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அறுவை ஜோக்ஸ்

0

Posted on : Thursday, April 07, 2011 | By : ஜெயராஜன் | In :

மனைவி: பால் எல்லாத்தையும் பூனை குடிக்கும் வரை என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்?
கணவன்:இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
********
''டேபிள் எப்போது வெட்கப்படும்?''
'அதன் டிராயரை இழுக்கும்போது.'
********
''கப்பலே கவிழ்ந்தாலும்,கன்னத்தில் கை வைக்கக்கூடாது என்கிறார்களே,அது ஏன்?''
'கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி நீச்சல் அடிக்க முடியும்?''
********
''இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கிறது?"'
'எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும்.'
********
''கப்பல் போவது பெற்றோலிலா ,,டீசலிலா?'
'கடலில்.'
********
''உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நீங்கிடிச்சாமே?''
'ஆமாம்,கடைசியாக இருந்தது சந்தோசம்.கல்யாணத்துக்கு அப்புறம் அது நீங்கிடுச்சு.'
********
மாணவன்:சார்,நான் யூரின் பாஸ் பண்ணிட்டு வரேன்.
ஆசிரியர்:அதையாவது பாஸ் பண்ணித் தொலைடா.
********
;;என்ன தரகரே,பொண்ணைப் பார்க்கணும்னு சொன்னா சுடுகாட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?
'நீங்கதானே அடக்கமான பொண்ணு வேணுமின்னு சொன்னீங்க?''
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment