உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-16

0

Posted on : Friday, April 15, 2011 | By : ஜெயராஜன் | In :

சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது.
வணக்கங்களின் தாய் பாவங்களை விடுதல்.
பேராதரவின் தாய் பொறுமையாய் இருத்தல்.
மருந்துகளின் தாய் குறைவாகச் சாப்பிடுதல்.
ஒழுக்கங்களின் தாய் குறைவாகப் பேசுதல்.
**********
ஒரு மனிதன் தினம்,
கொஞ்சம் சங்கீதம் கேட்க வேண்டும்.
ஒரு நல்ல கவிதையைப் படிக்க வேண்டும்.
சிறந்த ஓவியத்தைப் பார்க்க வேண்டும்.
முடிந்தால் அர்த்தத்தோடு சில வார்த்தைகள் பேச வேண்டும்.
**********
இளமை ஒரு குழப்பம்:
வாலிபம் ஒரு போராட்டம்:
முதுமை ஒரு மனமிரக்கம்.
**********
சுடத் தெரியாதவன் கையில் துப்பாக்கி இருந்தாலும் சுடத்தெரிந்தவன் அவனிடம் சரணடைகிறான்.ஆட்சி ஒரு முட்டாளிடம் இருந்தால் கூட அறிவுள்ளவனும் அவனுக்கு அடி பணிகிறான்.
**********
கிடைக்காதவரை எது பெரிதாகத் தோன்றுகிறதோ
கிடைத்ததும் எது அற்பமாகத் தோன்றுகிறதோ,
மேலும் கிடைக்காதா என்று எது ஏங்கச் செய்கிறதோ,
அது ஆசை எனப்படும்.
**********
அதிகமாகக் கடன் வாங்கும் தந்தை மகனுக்கு எதிரி:
வாயாடியான தாயார் பெண்ணுக்கு எதிரி.
மிகவும் அழகான பெண் கணவனுக்கு எதிரி:
ஆமாம் போடும் அமைச்சன் அரசனுக்கு எதிரி.
**********
தாய் நாட்டை நேசிப்பது இயல்பு.
மனித குலம்முழுவதையும் நேசிப்பதே சிறப்பு.,
**********
நல்லவனாக இருப்பது எளிது:
நேர்மையானவனாக இருப்பது கடினம்.
**********
நம் மனச்சான்று தவறு செய்யாத நீதிபதி.
---நாம் இன்னும் அதைக் கொல்லாமல் இருந்தால்.
**********
சிறு புண்களையும்,ஏழை உறவினர்களையும்
ஒருபோதும் அலட்சியப் படுத்தி விடக்கூடாது.
**********
எந்தச்செய்தியையும் எப்படிச்சொன்னாலும் நம்பாத மக்களை நம்ப வைப்பதற்கு சிறந்த வழி,கிசுகிசுவெனப் பேசுவதுதான்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment