உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடிக்காதே!

0

Posted on : Tuesday, April 12, 2011 | By : ஜெயராஜன் | In :

''என் மனைவி தன கையாலேயே எனக்குசாப்பாடு  பரிமாறுவாள்.''
'பரவாயில்லை,நீ கொடுத்து வைத்தவன்.'
''ஆனால் சமையல் செய்வது நான்தான்.''
**********
''என்னங்க,என் பல் ரொம்ப வலிக்குது.''
'பல் வலிக்கிற அளவுக்கு என்னத்த கடிச்ச?'
''உங்க அம்மாவைத்தான்.''
**********
''டாக்டர்,எவ்வளவு கடினமான ஆப்பரேசனை நல்லபடியா முடிச்சுட்டீங்களே,என் வாழ்த்துக்கள்.''
';எல்லாம் ஆண்டவன் செயல்.'
''அப்ப ஆப்பரேசனுக்கு உரிய பீசை உண்டியலில் போட்டு விடட்டுமா?''
**********
''அம்மா,ஏதாவது பழைய பொருள் விக்கிற மாதிரி இருக்கா என்று வாசலில் ஒரு ஆள் கேட்கிறார்.''
'இப்ப,அப்பா இல்லை என்று சொல்.'
**********
திருடனின் மனைவி:இப்பெல்லாம் எங்க வீட்டுக்காரர் சரியாகவே தொழில் செய்வதில்லை.அடிக்கடி வெளியூர் போய்விடுகிறார்.இந்த மாதம் மட்டும் மூணு தடவை வேலூருக்குப் போயிட்டாருன்னா பாத்துக்கங்க.''
**********
தலைவர்:என்னப்பா,தொகுதியில கெட்டது தான் நடக்குதுன்னு மக்கள் பேசிக் கொள்கிறார்களாமே?
தொண்டன்:நீங்க தொகுதியில நடந்து போனதை சொல்லியிருப்பாங்க
**********
''டாக்டர்,மூணு மாதமா எனக்குக் கடுமையான இருமல்.''
'அப்படியா,மூணு மாதமும்  சும்மாவா இருந்தீங்க?'
''இல்லை டாக்டர்,நான் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.''
**********
''உங்களுக்கு அல்சராமே?''
'அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்குறீங்க?'
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment